For Daily Alerts
Just In
சுடுகாடு பாதை வேண்டி பிணத்துடன் போராட்டம்
திருச்சி: திருச்சி அருகே உள்ள சுடுகாட்டுக்குச் செல்ல பாதை தரப்படாததால் ஆத்திரமடைந்தவர்கள், பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் திருக்கானூர் அருகே எம்.ஜி.ஆர் பாளையம் உள்ளது. இங்குள்ள மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவர் நேற்று மரணமடைந்தார்.
அவரது உடலை சுடுகாட்ட்டுக்கு எடுத்து செல்லும் போது சவரி முத்து என்பவர் தனது நிலம் வழியாக செல்லக்கூடாது என்று தடுத்தார்.
இதையடுத்து ஜோசப்பின் சகோதரர் ஆரோக்கியம் சாலையில் பிணத்தை போட்டு மறியல் செய்தார். அங்கு விரைந்த தாசில்தார் கருப்பையா மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தி நிரந்தர பாதை அமைக்கப்படும் என்று உறுதி கொடுத்த பின் பிணத்தை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று உடலை அடக்கம் செய்தனர்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 19:44 [IST]