For Daily Alerts
Just In
14 வருடங்களுக்கு பின் திறக்கப்பட்ட இராக் விமான நிலையம்
பாக்தாத்: இராக்கின் 2வது பெரிய நகரான மொசுலில் உள்ள விமான நிலையம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
1991ம் ஆண்டு நடந்த வளைகுடாப் போரைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம் மொசுல் வான்வெளியில் விமானங்கள் பறக்கத் தடை விதித்தது. இதனால் மொசுல் விமான நிலையம் மூடப்பட்டது.
அதன் பின்னர் மொசுல் விமான நிலையம் செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 14 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மொசுல் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
முதல் விமானம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளை பாக்தாத் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கிருந்து பிறிதொரு விமானத்தில் செளதி அரேபியா யாத்ரீகர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 17:39 [IST]