For Daily Alerts
Just In
அகதிகள் முகாம்களை ரூ. 47 லட்சத்தில் சீரமைக்க திட்டம்
கரூர்: மிகவும் மோசமான நிலையில் உள்ள அகதிகள் முகாம்களை சீரமைக்க ரூ. 47 லட்சம் மதிப்பிலான திட்டத்தை நிறைவேற்ற அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் 117 அகதிகள் முகாம்கள் உள்ளன. மிகவும் பாழடைந்த நிலையில் உள்ள முகாம்களை சீரமைக்க மத்திய அரசின் அனுமதிக்காக தமிழக அரசு காத்துக் கொண்டுள்ளது.
கரூரில் இலங்கைத் தமிழர்களிடையே பேசிய அகதிகள் நலவாரியத்தின் இயக்குனர் கற்பூர சுந்தரபாண்டியன் இதனைத் தெரிவித்தார். மேலும் கரூர் ராயனூரில் உள்ள முகாமை வேறிடத்துக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 19:40 [IST]