For Daily Alerts
Just In
சிட்டி குரூப் தலைவராக இந்தியர் நியமனம்
டெல்லி: உலகின் முன்னணி நிதி-வங்கி நிறுவனமான சிட்டி குரூப்பின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான விக்ரம் பண்டிட் (50) நியமிக்கப்பட்டுள்ளார்.
ரியல் எஸ்டேட் முதலீடுகளில் ஏற்பட்ட சரிவுகளால் அமெரிக்க வங்கித்துறைக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், சிட்டி குரூப் மட்டும் 9 பில்லியன் டாலர்களை இழந்துள்ள நிலையில் பண்டின் இந்தப் பொறுப்பை ஏற்கிறார்.
மோர்கன் ஸ்டான்லியின் முன்னாள் தலைவரான பண்டிட், 16 வயதில் அமெரிக்காவில் குடியேறியவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிகல் என்ஜினியரிங் படித்த பண்டிட் பின்னர் ெபாருளாதாரத்துறைக்கு மாறினார்.
பொருளாதாரத்தில் பிஎச்டி பெற்றுள்ள பண்டிட், இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸின் இயக்குனர்களில் ஒருவராகவும் உள்ளார்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 18:33 [IST]