18 உடன் ஓடிய 32-போலீசில் கணவர் புகார்
சேலம்: 32 வயதுப் பெண் 18 வாலிபருடன் கள்ளக் காதல் கொண்டு வீட்டை விட்டு ஓடியுள்ளார். அவரை மீட்டுத் தருமாறு பெண்ணின் கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
சேலம் அருகே ஓமலூரைச் சேர்ந்தவர் சந்திரனின் மனைவி சுமதி (32). இந்த தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இரு குழந்தைகள் உள்ளனர். சுமதி தறிக் கூடத்தில் வேலைபார்த்து வந்தார்.
அங்கு வேலை பார்த்து வந்த பிரபு (18) என்ற வாலிபருடன் சுமதிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இந் நிலையில் சுமதியும் பிரபுவும் தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு ஓடிப் போய்விட்டனர்.
இது குறித்து சந்திரன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், என்னையும் 2 குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலன் பிரபுவுடன் ஓடி போன மனைவியை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சுமதியையும் வாலிபரையும் தேடி வருகின்றனர்.
18 வயது வாலிபருடன் 32 வயது பெண் ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.