For Quick Alerts
For Daily Alerts
Just In
வெடித்துச் சிதறிய இலவச டிவி-குழந்தைகள் தப்பினர்
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி ராமசாமி. இவருக்கு சில மாதங்களுக்கு முன் தமிழக அரசின் இலவச கலர் டி.வி. வழங்கப்பட்டது.
நேற்றிரவு ராமசாமியும், அவரது மனைவியும் வெளியே சென்று விட்ட நிலையில் இவர்களது குழந்தைகள் நந்தகுமார் (10), நந்தினி (8) ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர்.
இரவு 8.15 மணி அளவில் மின்தடை ஏற்பட்டது. ஒரு மணி நேரத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது. எனவே குழந்தைகள் இருவரும் டி.வியை ஆன் செய்தபோது அது வெடித்து சிதறியது.
தீப் பிடித்து எரிந்த டிவியைப் பார்த்து பயத்தில் குழந்தைகள் அலறவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீ பரவாமல் அணைத்தனர்.
இந்த விபத்தில் குழந்தைகள் காயமின்றி தப்பிவிட்டனர்.
அதிக மின் அழுத்தம் காரணமாக டி.வி வெடித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 19:30 [IST]