For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஸ்ஸாம்-ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து 5 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News


குவஹாத்தி: அஸ்ஸாமில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்ததில் 5 பேர் பலியாயினர்.

இந்த திப்ரூகரில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த இந்த ரயில் நேற்று நள்ளிரவு அஸ்ஸாமின் கொலாகட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதன் சரக்குப் பெட்டிக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.

இதில் சரக்குப் பெட்டியில் பயணித்த 5 பேர் பலியாயிர். மேலும் பலர் காயமடைந்தனர். இதில் ரயில் தண்டவாளமும் சேதமடைந்தது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று காலை 6 மணிக்கு இந்த ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

ராஜஸ்தானில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது:

இதற்கிடையே ராஜஸ்தானில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 5 பயணிகள் காயமடைந்தனர்.

ஜெய்ப்பூரில் இருந்து ஆகமதாபாத் நோக்கி சென்று‌ கொண்டிருந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் குஜராத் எல்லையில் உள்ள பானாஸ் ‌என்ற இடத்தில் தடம் புரண்டது. ரயில் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை உணர்ந்த டிரைவர் திடீரென பிரேக்‌கை போட்டார்.

இதையடுத்து அந்த ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 5 பயணிகள் காயமடைந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X