ஜெயலிலதாவுடன் சுப்ரமணியம் சுவாமி சந்திப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி நேற்று மாலை திடீரென சந்தித்துப் பேசினார்.
சமீப காலத்தில் நடக்கும் இரண்டாவது சந்திப்பு இது.
நீண்ட காலமாக எதிரும் புதிருமாக இருந்து வந்த ஜெயலலிதாவும், சுப்ரமணியம் சுவாமியும், ராமர் பால விவகாரத்தில் ஒரே கோட்டில் இணைந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென ஜெயலலிதாவை, சுப்ரமணியசுவாமி சந்தித்துப் பேசினார்.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை அதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு விளக்கவில்லை.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. இதுதொடர்பாக நான் முன்பு கூறியவை உண்மை என்பது நிரூபணமாகி விட்டதாக ஜெயலலிதா சமீபத்தில் அறிக்கை விட்டிருந்தார். இதை சுப்ரமணியம் சுவாமியும் ஆமோதித்திருந்தார். இந்தப் பின்னணியில், சுவாமி, ஜெ. சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.