For Daily Alerts
Just In
சேது திட்டத்தை முடக்கியது ஜெ-வைகோ தான்-மார்க்சிஸ்ட்
மார்த்தாண்டம்: சேது சமுத்திர திட்டம் முடங்கி போனதற்கு ஜெயலலிதாவும், வைகோவும் தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
மார்த்தாண்டத்தில் நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,
தமிழகத்தில் தொழில்துறையில் பல திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் உள்ளன. இதுகுறித்தும் சிறப்பு பொருளாதார மண்டலம் குறித்தும் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சேது சமுத்திர திட்டம் முடங்க ஜெயலலிதாவும், வைகோவும் தான் முக்கிய காரணமானவர்கள். இந்த திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.
உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்த தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றார் வரதராஜன்.
Comments
Story first published: Monday, December 17, 2007, 11:09 [IST]