For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். தற்கொலைப் படைத் தாக்குதலில் 50 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News


பெஷாவர்: பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள சர்ஸாதா நகரில் இன்று மசூதி ஒன்றில் நடந்த பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அமைச்சர் உயிர் தப்பினார்.

சர்ஸாதா நகரில் உள்ள ஒரு மசூதியில் இன்று காலை பக்ரீத் தொழுகைக்காக பெரும் திரளானோர் கூடி தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒரு தீவிரவாதி கூட்டத்தினருக்கு மத்தியில், தனது உடலில் கட்டியிலிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.

இதில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த இடமே பெரும் ரத்த வெள்ளமாக காணப்படுகிறது.

தொழுகைக்கு வந்திருந்த முன்னாள் உள்துறை அமைச்சர் அப்தாப் அகமது கான் செர்பாவைக் குறி வைத்தே இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கிப்படுகிறது. ஆனால் அப்தாப் காயமின்றி உயிர் தப்பினார்.

இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தற்கொலைப் படைத் தாக்குதலால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X