புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் பிரதீபா பாட்டீல் வழிபாடு
புதுச்சேரி: புதுச்சேரி வந்துள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், அங்குள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் இன்று காலை சாமி கும்பிட்டார்.
புதுச்சேரி வந்துள்ள பிரதீபா பாட்டீல், இன்று காலை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வருகை தந்தார். அவரை கோவில் தலைமை குருக்கள், அறங்காவலர் குழுவினர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பின்னர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார் பிரதீபா பாட்டீல்.
இதைத் தொடர்ந்து பிரதீபா பாட்டீல், அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்றார். அங்குள்ள அரவிந்தரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிரதீபாவுடன், ஆளுநர் முகுந்த் மித்தி, முதல்வர் ரங்கசாமி ஆகியோரும் சென்றிருந்தனர்.
மேலும் அங்குள்ள ஸ்ரீ அரவிந்தர் சர்வதேச கல்வி மையத்திற்கும் பிரதீபா சென்றார்.
அங்கு மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கைவினைப் பொருள் கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதீபா, மாணவர்கள் பாடிய தேச பக்தி மற்றும் பக்திப் பாடல்களையும் ரசித்துக் கேட்டார்.
இதைத் தொடர்ந்து ஆரோவில் சர்வதேச நகருக்கும் பிரதீபா சென்றார்.