ஜன. 16ம் தேதி பழனி தைப்பூச விழா தொடக்கம்
பழனி: புகழ் பெற்ற பழனி தைப்பூசத் திருவிழா வருகிற ஜனவரி 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 22ம் தேதி தைப்பூசம் நடைபெறுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் அலைகடலென செல்வது போல, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலுக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பாத யாத்திரையாக செல்வது வழக்கம்.
ஜனவரி 16ம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் 22ம் தேதி நடைபெறுகிறது.
பழனி பெரியநாயகியம்மன் சன்னிதானத்தில் ஜனவரி 16ம் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். அன்று உச்சிக்காலத்தில் மலைக் கோவிலில் காப்புக் கட்டுதல் நடைபெறும்.
கொடியேற்றம், சுவாமி புறப்பாடு, யாகசாலை பூஜைகள் பெரியநாயகியம்மன் கோயிலில் நடக்கிறது.
ஜனவரி 21ம் தேதி இரவு முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இறவு 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.
25ம் தேதி தைப்பூசத் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இறவு 7 மணிக்கு பெரியநாயகியம்மன் கோவிலில் தெப்பம் உலா வரும்.
தைப்பூசத்தையொட்டி பழனிக்கு வரும் பக்தர்கள் நலனுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.