For Daily Alerts
Just In
'டாஸ்மாக்' கடையை மூடக் கோரி பெண்கள் போராட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் மதுக் கடையை மூடக் கோரி 300க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர். அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை மெயின் ரோட்டில் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இந்தப் பகுதியில் நிறைய வீடுகள் உள்ள நிலையில் தினசரி குடிகாரர்களால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன.
இதனால் கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் மதுக் கடையை மூடக் கோரி அந்தக் கடைக்கு முன்பாக இன்று திடீரென மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஜனவரி 1ம் தேதிக்குள் கடையை மூட வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை பெரிதுபடுத்துவோம் என பெண்கள் ஆவேசத்துடன் கூறியுள்ளனர்.
Story first published: Tuesday, December 25, 2007, 15:22 [IST]