For Daily Alerts
Just In
ஆந்திர சாலை விபத்தில் 6 பெண்கள் உட்பட 13 பேர் பலி
நெல்லூர்: ஆந்திர மாநிலத்தில் நடந்த ெபரும் சாலை விபத்தில் 6 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரா மாநிலம், நெல்லூர் அருகே மரிப்பாடு என்ற இடத்தில் திருமண கோஷ்டியினர் சென்ற வேன் எதிரில் வந்த லாரி மீது பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் சென்ற 6 பெண்கள், 3 குழந்தைகள், 4 ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
வேனில் இருந்தவர்கள் அனைவரும் கர்னூல் மாவட்டம், ஜமலதுர்கா என்ற இடத்திலிருந்து குச்சிரெட்டிபாளைத்திற்கு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Comments
Story first published: Saturday, December 29, 2007, 13:43 [IST]