For Daily Alerts
Just In
ஆஸ்துமா தொல்லை - சோனியா மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: ஆஸ்துமா காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சோனியா காந்திக்கு இன்று (ஜனவரி 1) அதிகாலை ஆஸ்துமா பிரச்சினை ஏற்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து சர் கங்காராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்றைக்குள் அவர் வீடு திரும்பி விடுவார் என்று மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.
சோனியா காந்தி புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ராஜஸ்தான் போக இருந்தார். ஆனால் உடல் நல பாதிப்பைத் தொடர்ந்து அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டது.
Comments
Story first published: Tuesday, January 1, 2008, 12:27 [IST]