For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்மாவட்ட கடலோரங்களில் மத்திய குழு ஆய்வு

By Staff
Google Oneindia Tamil News


தூத்துக்குடி: கடலோர மேலாண்மை குறித்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதியில் மத்திய உயர்நிலைகுழு ஜன.3ம் தேதி முதல் 3 நாட்கள் ஆய்வு நடத்துகிறது.

கடலோர பகுதிகளில் ஏற்படும் இயற்கை சீற்றங்கள், கடல் அரிப்பு, கடல் சீற்றம் போன்றவற்றை சமாளிப்பது, அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதுடன் கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

கடல் ஆராய்ச்சி துறை, நிலத்தியல் துறை, சூற்றுசுழல் துறை, எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட உயர் நிலைக் குழுவினர் ஜன.3ம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வருகின்றனர்.

இக்குழுவினர் மாவட்ட கடற்கரைக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்துகின்றனர். இந்த ஆய்வின் மூலம் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதி மேம்பாட்டுக்கு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை பெறுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இக்குழுவினர் ஜன.4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட கடற்கரை பகுதிகளில் ஆய்வு செய்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X