For Daily Alerts
Just In
சிறுமியை கற்பழித்த ஏட்டு கைது
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது செய்ய்பப்டடார்.
கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், அரசிகரே காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்ப்பவர் சசிதர் (32). இவர் நேற்றிரவு குடிபோதையில் ரயில் நிலையத்துக்கு சென்றார்.
அங்கு ரயிலுக்காக காத்திருந்த 2 சிறுமிகளை மிரட்டி அருகில் உள்ள மைதானத்துக்கு அழைத்து சென்று ஒரு சிறுமியை கற்பழித்துள்ளார். மற்றொரு சிறுமி உதவி கேட்டு கதறியதையடுத்து அப்பகுதி மக்கள் விரைந்து வந்து ஏட்டு சசிதருக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சிறுமியை கற்பழித்த அந்த ஏட்டையாவை கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ரானே உத்தரவிட்டார்.
Story first published: Friday, January 4, 2008, 18:06 [IST]