சாக்கடை நீர் கலப்பால் நிறம் மாறும் கீழக்கரை கடல்
-கீழக்கரையிலிருந்து ஹமீது யாசின்
கீழக்கரை (ராமநாதபுரம்): ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடல் பகுதியில் சாக்கடை நீர் அதிக அளவில் திருப்பி விடப்பட்டு வருவதால் கடலின் நிறம் மாறி வருகிறது. இதனால் இப் பகுதியில் பெரும் சுற்றுச்சூழல் கேடு ஏற்பட்டு கடல் வாழ் உயிரினங்கள் அழியும் அபாயமும் எழுந்துள்ளது.
கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் முடிவடைந்து விட்டன. ஆனால், இப்போதைக்கு கீழக்கரையின் அனைத்து வார்டுகளிலும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மூலம் கழிவுநீர் கடலுக்குள் தான் திருப்பி விடப்பட்டு வருகிறது.
இதனால் கடல் மாசு படிந்து நிறம் மாறத் தொடங்கியுள்ளது. இது மீன்களையும் பாதித்துள்ளது. இந்த மீன்களை உண்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும் வரை கழிவுநீரைத் தேக்கி இயற்கை உரம் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(வாசகர்கள் உங்கள் பகுதி பிரச்சனைகளையும் நமக்கு அனுப்பலாம். அனுப்ப வேண்டிய இணைய தள முகவரி [email protected])