For Quick Alerts
For Daily Alerts
Just In
சாத்தூரில் தீப்பெட்டி லாரி எரிந்து 2 பேர் பலி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தீப்பெட்டிகளை லாரியில் ஏற்றியபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டதில் இரண்டு தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்னர்.
இன்று காலை இந்த கோர விபத்து நடந்தது. சாத்தூரில் உள்ள மீனாட்சி தீப்பெட்டித் தொழிற்சாலையில் இன்று காலை தீப்பெட்டி பண்டல்களை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் லாரி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில் தீப்பெட்டி பண்டில்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த ஈஸ்வரன் (27), கண்ணன் (29) ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரும் சிவகிரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
விபத்தில் சிக்கி லாரி முழுவதும் எரிந்து போய் விட்டது. இந்த விபத்தால் ரூ. 5 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Story first published: Sunday, January 6, 2008, 14:43 [IST]