மத்தியிலும், மாநிலத்திலும் தேர்தலை சந்திக்கத் தயார்: முத்துச்சாமி
திருநெல்வேலி: மத்தியிலும், மாநிலத்திலும் இடைத் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் முத்துச்சாமி கூறியுள்ளார்.
நெல்லை டவுனில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி பேசுகையில், தமிழகத்தில் தற்போது அதிமுகவின் செல்வாக்கு அதிகாரித்து வருவதாக கல்லூரி மாணவர்கள் எடுத்த சர்வே தெரிவித்துள்ளது. இது திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதையே காட்டுகிறது.
தமிழகத்தில் அரிசி மற்றும் உணவு பொருட்களின் விலையேற்றம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் பதுங்கியுள்ளார். அவர் சரியான நேரத்தில் திமுக அரசு மீது பாய்ச்சல் எடுப்பார். கம்யூ, மற்றும் பாமக மத்தியிலும், மாநிலத்திலும் சரியான நேரத்தில் ஆட்சியை கவிழ்த்து விடும்.
ஒரே நேரத்தில் ஆட்சியை கவிழ்த்தால் மட்டுமே 2 தேர்தலிலும் நாங்கள் ஒரே நேரத்தில் பணி செய்திட முடியும். தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்றார் அவர்.