For Daily Alerts
Just In
பெனாசிர் கொலையாளி அடையாளம் தெரிந்தது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை கொன்ற கொலையாளியின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூட்டோவைக் கொன்ற பின்னர் நடந்த குண்டுவெடிப்பில் அவர் இறந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
பெனாசிர் பூட்டோ கொலைச் சம்பவம் தொடர்பாக வெளியான புதிய வீடியோவில் அந்தக் கொலையாளி இடம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த நபர் பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் கோட்டையாக மாறியுள்ள வட மேற்கு எல்லை மாகாணத்தின், ஸ்வாபி மாவடத்தைச் சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர் தான் கொலையாளி என்று தெரிய வந்ததும் அவரது வீட்டில் போலீஸார் அதிரடி சோதனையும் நடத்தியுள்ளனர்.
பூட்டோ கொல்லப்பட்டதும் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலின்போது அந்த மர்ம நபர் கொல்லப்பட்டு விட்டார் என்று பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, January 8, 2008, 13:21 [IST]