For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாகூர் தற்கொலைப் படைத் தாக்குதலில் 26 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News


இஸ்லாமாபாத்: லாகூர் உயர்நீதிமன்றத்திற்கு வெளியே இன்று நடந்த பயங்கர மனித வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

லாகூர் உயர்நீதிமன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் மீது சந்தேகம் அடைந்த போலீஸார் அந்த நபரை தடுக்க முயன்றனர். அப்போது அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.

இதில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் உள்பட 26 பேர் உடல் சிதறி பலியானார்கள். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் போலீஸார் எனத் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் லாகூரில் பதட்டம் நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X