குஜராத் ரயிலில் மதுரை வாலிபர் கொலை
நெல்லை: குஜராத்தில் இருந்து நெல்லை வந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த என்ஜினியர் கொலை ஒருவர் கொலையாகி கிடந்தார்.
மதுரை பீபிகுளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் ரயில்வேயில் செக்சன் ஆபிசராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் பாபு. இவர் குஜராத் மாநிலம் காந்திடாமில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எஞ்ஜினியராக வேலை பார்த்து வந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயிலில் மதுரைக்கு வந்து கொண்டிருந்தார்.
இந்த ரயில் நெல்லை ரயில் நிலையம் வந்தபோது ராஜேஷ் பாபு கத்தியால் குத்தப்பட்டு பிணமாகக் கிடந்தார். போலீசார் ராஜேஷ் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளியை பிடிக்க ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஏ.டி துரைக்குமார் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் முகைதீன் ஷா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் செங்குளம், நாங்குநேரி ரயில் நிலையங்களுக்கு சென்று விசாரனை நடத்தினர். இந்நிலையில் துப்பு எதுவும் கிடைக்காததால் ராஜேஷ்பாபு வேலை செய்த இடமான குஜராத் சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.