பெண்ணை துப்பாக்கியால் சுட்ட மாணவனின் தாத்தா கைது
திருச்செங்கோடு: தன்னை திட்டிய பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற மாணவனின் தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். அவன் சுட பயன்படுத்திய துப்பாக்கி இவருக்கு சொந்தமானதாகும். அந்த துப்பாக்கிக்கு லைசென்ஸ் கிடையாது.
திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வரும் லோகநாயகி (53) என்பவரை ரவிச்சந்திரன் என்பவரின் மகன் ரஞ்சித் (16) நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டான்.
இதில் லோகநாயகியின் முதுகில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார்.
11 வகுப்பு மாணவனான ரஞ்சித் பயன்படுத்திய ரிவால்வர் ரக துப்பாக்கிக்கு லைசென்ஸ் இல்லை. இது அவனது தாத்தா கந்தசாமிக்கு சொந்தமானதாகும். இவர் திமுக பிரமுகராவார்.
இந் நிலையில் லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கியை வாங்கி வைத்திருந்த கந்தசாமியை திருச்செங்கோடு போலீசார் கைது செய்தனர்.
அவர் மாஜிஸ்திரேட்டு கல்பனா முன்பு ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.