இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா: இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் சுனாமி பீதி ஏற்பட்டு மக்கள் ஓட்டம் பிடித்தனர்.
இன்று காலையில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள நியாஸ் தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் கடலோரப் பகுதி வீடுகளில் உள்ளவர்கள் சுனாமி பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரம் குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை.
சுனாமி எச்சரிக்கை குறித்து அந்நாட்டு அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இருப்பினும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் வீதிகளில் பீதியுடன் அமர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications