For Daily Alerts
Just In
100 அடி ஆழ கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
கொல்லங்கோடு அருகே உள்ள பூவான்விளையை சேர்ந்தவர் விஜிக்குமார். சம்பவத்தன்று இரவு மது அருந்திய விஜிக்குமார் தள்ளாடி நடந்து வந்தபோது வீட்டில் அருகே உள்ள 100 அடி உள்ள ஆழ கிணற்றில் தவறி விழுந்தார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கொல்லங்கோடு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி சுசீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த விஜிகுமாரை உயிருடன் மீட்டனர்.
Comments
Story first published: Friday, January 25, 2008, 11:35 [IST]