For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியரசு தின விழாவுக்குப் போன 5 பள்ளிக் குழந்தைகள் விபத்தில் பலி

By Staff
Google Oneindia Tamil News


ரேபரேலி: உ.பி. மாநிலம் ரேபரேலியில் குடியரசு தின விழாவுக்கு சென்ற பள்ளி வேன் மீது லாரி மோதியதில் 5 பள்ளிக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரேபரேலி அருகேயுள்ள முன்ஷிகஞ்ச் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த கே.என். பப்ளிக் பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் சென்றது. அதில் 25 மாணவ, மாணவியர் இருந்தனர்.

அப்போது வேன் மீது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் வேனில் இருந்த பள்ளி குழந்தைகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயம் அடைந்த பள்ளிக் குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 குழந்தைகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X