For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவை 50 மாநிலங்களாக பிரிக்க சுவாமி கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News


திருமலை: இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக வேண்டுமானால் இந்தியாவை 50 மாநிலங்களைக் கொண்ட நாடாக உருவாக்க வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம் திருமலைக்கு வந்த சுவாமி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறு சிறு மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. தெலுங்கானா, ராயலசீமா ஆகிய மாநிலங்கள் உருவாக நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.

ஹரியாணா மாநிலத்திலிருந்து பிரிந்து இமாச்சலப் பிரதேசம் உருவான பின்னர்தான் அந்தப் பிராந்தியம் பெரும் வளர்ச்சியைக் கண்டது. எனவே சிறு சிறு மாநிலங்களை உருவாக்க வேண்டும். இந்தியாவை 50 மாநிலங்கள் கொண்டதாக மாற்ற வேண்டும். அப்போதுதான் நாம் விரைவில் வளர்ச்சி அடைந்த நாடாக மாற முடியும்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்லதல்ல. இதனால் அரசியலுக்கும் நல்லதல்ல.

பிரதமர் மன்மோகன் சிங்கைக் கட்டுப்படுத்தும் வகையில் நடந்து வருகிறார் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான சோனியாக காந்தி. எனவேதான் மத்திய அரசின் செயல்பாடுகள் இவ்வளவு மோசமாக உள்ளன என்றார் சுவாமி.

முன்னதாக திருப்பதி கோவிலுக்குச் சென்ற சுவாமி வெங்கடாசலபதியை தரிசித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X