For Daily Alerts
Just In
ஊட்டியில் வாந்தி - பேதி: பரவுகிறது மக்கள் அவதி
ஊட்டி:ஊட்டியில் குளிரும், பனிப்பொழிவும், வெயிலும் மாறி மாறி வெளுத்துக் கட்டுவதால், அங்கு வயிற்றுப் போக்கும், வாந்தி, பேதியும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஊட்டியில் கடந்த சில மாதங்களாக பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. இதனால் தேயிலைச் செடிகள், காய்கறிச் செடிகள் கருகி வருகின்றன.
இரவில் கடும் பனி பொழிந்தாலும், பகலில் வெயில் தலையைப் பிளக்கிறது. பகலில் கடும் வெயிலும், இரவில் கடும் குளிர் மற்றும் பனி கொட்டுவதுமாக இருப்பதால் வயிற்றுப் போக்கு பரவத் தொடங்கியுள்ளது. வாந்தி, பேதியும் அதிக அளவில் காணப்படுகிறது.
தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள இந்த உடல் உபாதைகளால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Comments
Story first published: Saturday, January 26, 2008, 10:27 [IST]