குவாலியர்: பஸ் விபத்தில்15 பேர் பலி-21 பேர் படுகாயம்
குணா (மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் அருகே தனியார் பேருந்தும் டிரக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பேருந்தில் இருந்த 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
மத்தியப் பிரதேசத்தின், கும்ப்ராஜ் என்ற இடத்திற்கு சென்ற தனியார் பேருந்து, வனப் பகுதியில் சென்றபோது, ஆக்ரா-மும்பை நெடுஞ்சாலை அருகே, எதிரே வந்த டிரக் மீது பலமாக மோதியதில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த 29 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மேலும் 7 பயணிகள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
21 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக குவாலியர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு மத்தியப் பிரசேத முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலா ரூ.50,000 நிதியுதவி அறிவித்துள்ளார்.