For Quick Alerts
For Daily Alerts
Just In
முன்னாள் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கோவிந்தராஜன் மறைவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் தொகுதியின் முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவான கோவிந்தராஜன் காலமானார். அவருக்கு வயது (87). நெல்லிக்குப்பம் தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், அமைச்சர் பன்னீர்செல்வம் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கோவிந்தராஜின் மறைவை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சிக் கொடி 3 நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என வரதராஜன் தெரிவித்தார்.
Comments
Story first published: Monday, January 28, 2008, 10:35 [IST]