For Daily Alerts
Just In
மின்சார ரயில் மோதி 3 பேர் பலி - பெண் படுகாயம்
திருவள்ளூர்: தந்தையின் இறுதிச் சடங்குக்கு வந்த 3 மகன்கள் ரயில் மோதி பரிதாபமாக பலியானார்கள்.
திருவள்ளூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தனது மகன் வீட்டில் மரணமடைந்தார். இதையடுத்து பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அவரது மகன்கள் சங்கர் (36), செல்வம் (33), மகள் கெளரி (5) மற்றும் ராமமூர்த்தியின் தம்பி புஷ்பராஜ் (60) ஆகியோர் திருவள்ளூருக்குக் கிளம்பினர்.
வேப்பம்பட்டு வந்த அவர்கள் அங்குள்ள ரயில் நிலையத்திற்குச் சென்றனர். அப்போது ரயில்வே தண்டவாளத்தை அவர்கள் கடந்தபோது கடற்கரை - திருத்தணி மின்சார ரயில் வந்ததைக் கவனிக்கவில்லை.
வேகமாக வந்த ரயில் அவர்கள் மீது பலமாக மோதியது. இதில் சங்கர், செல்வம், புஷ்பராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கெளரி படுகாயமடைந்தார்.
Comments
Story first published: Tuesday, January 29, 2008, 11:00 [IST]