For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதுமலையில் அமையப் போகும் புலிகள் சரணாலயம்

By Staff
Google Oneindia Tamil News

Tiger

டெல்லி: 11வது திட்ட காலத்தில் புலிகள் பாதுகாப்புக்கென (Project Tiger Project) ரூ. 600 கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதுமலையில் புதிதாக ஒரு புலிகள் சரணாலயம் அமைக்கப்படவுள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் இதுகுறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,

புலிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். அவர்களுக்குரிய மாற்று வாழ்விடங்கள் வழங்கப்படும். வன உயிரினப் பாதுகாப்புக்கென தனி கவனம் செலுத்தப்படும்.

புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதுமலையிலும், கேரளத்தில் பரிம்பிகுளம்-அண்ணாமலை காட்டுப் பகுதியிலும் (இது தமிழகத்தை ஒட்டு மேற்குத் தொடர்ச்சி மலை காட்டுப் பகுதி) மற்றும் கர்நாடகம், சட்டீஸ்கர், அஸ்ஸாம் மாநிலங்கள் உள்பட 8 இடங்களில் புதிய புலிகள் சரணாலயங்கள் அமைக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மேலும் பலமுள்ள அமைப்பாக மாற்றப்படும். புதிதாக கண்காணிப்பு ஆய்வகமும் அமைக்கப்படும் என்றார் சிதம்பரம்.

முதுமலையில் இப்போது யானைகள் சரணாயலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X