For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாழ்ப்பாணம்: மனித குண்டு வெடித்து 4 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News


கொழும்பு: யாழ்ப்பாணம் அருகே விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உடலில் கட்டியிருந்த குண்டு திடீரென வெடித்ததில், 4 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், இன்று காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் அருகே உள்ள திருநெல்வேலி என்ற இடத்தில், மக்கள் நெரிசல் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார்.

அப்போது திடீரென அவரது உடலில் கட்டியிருந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில் நான்கு பொதுமக்கள் பலியானார்கள். 2 பேர் படுகாயமடைந்தனர்.

அவரது உடலில் கட்டியிருந்து தவறுதலாக முன்கூட்டியே வெடித்து விட்டதாக கருதுகிறோம் என்றார் அவர்.

இதற்கிடையே பிப்ரவரி 4ம் தேதி இலங்கையின் 60வது சுதந்திர தின விழா வருவதால் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X