For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நலவாரியம் அமைக்க கோரும் சாமியார்கள் சம்மேளனம்

By Staff
Google Oneindia Tamil News


திருச்சி: கிராம கோவில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சாமியார்களுக்காக நலவாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என சாமியார்கள் சம்மேளனம் அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சாமியார்கள் சம்மேளத்தின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கிராமப்புற கோவில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள 4,000 கோவில் சாமியார்களுக்கு மாதம் ரூ.750 ஓய்வூதியம் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர்கள் அரசு அதிகாரிகளை விரைவில் இதுகுறித்து சந்தித்து பேசுவர்.

வரும் பிப்ரவரி 20ம் தேதி பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பிறந்த நாளை சாமியார்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவில்களுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்தும் ஆடு, மாடுகளை கோவில் நிர்வாகம் ஏலம் விடக்கூடாது. அதை கோவில்களில் பணிபுரியும் சாமியார்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X