பஸ்-ஆட்டோ மோதல்: 5 பெண்கள் பலி, 6 பேர் படுகாயம்
கோதாவரி: ஆந்திர மாநிலத்தில் ஆட்டோவும், பேருந்தும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் கோதாவரி மாவட்டம், மடப்பள்ளி என்ற இடத்தில் விவசாய வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்கள் 13 பேர் ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.
ஆட்டோவை அதன் டிரைவர் ரோட்டின் எதிர் திசையில் விதியை மீறி ஓட்டிச் சென்றார். அப்போது நெடுஞ்சாலையில் வந்த அரசுப் பேருந்து ஆட்டோ மீது பலமாக மோதியது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்தவர்களில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இந்த விபத்தால் சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.