For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாதா அமிர்தானந்தா மயி பெயரில் மெகா மோசடி

By Staff
Google Oneindia Tamil News


சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதா அமிர்தானந்தா மயி பெயரில் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சீர்காழி பிடாரி கீழ ராஜ வீதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் அமிர்தானந்தா மயி எஜிகேஷனல் வெல்பர் சென்டர் என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

தனது நிறுவனத்திற்கு வரும் நபர்களிடம் மாதா அமிர்தானந்தா மயி மடத்தில் கடன் வாங்கித் தருவதாக கூறி அங்குள்ள பல மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் பல லட்ச ரூபாய் பணம் வசூல் செய்துள்ளார்.

கடந்த மாதம் கும்பகோணம் வந்த மாதா அமிர்தானந்தா மயி மடத்தின் நிர்வாககளிடம் மகளிர் சுய உதவிக் குழுவினர் சிலர் இது பற்றி கேட்டுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மட நிர்வாகிகள் இது போன்ற திட்டங்கள் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதை கேட்ட பெண்கள் அதிர்ச்சி அடைந்து சீர்காழி போலீஸில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் மாதா அமிர்தானந்தா மயி மடத்தில் கடன் வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த ராஜசேகரனை கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X