அஇசமக கொடியேற்று விழாவில் கோஷ்டி மோதல்-அடிதடி
நெல்லை: முளைத்து மூன்று இலை கூட விடாத நடிகர் சரத்குமாரின் புதிய கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொடியேற்று விழாவில் கட்சி நிர்வாகிகளுக்கிடையை திடீரென்று கோஷ்டி மோதல் ஏற்பட்டு அடிதடி நடந்தது.
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தில் அஇசமக சார்பில் கொடியேற்று விழா நடந்தது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சேவியர் கலந்து கொண்டு கொடியேற்றினார். இதற்கான அழைப்பிதழில் அதே ஊரை சேர்ந்த ஜசக் என்பவரின் பெயர் இடம் றவில்லை. அதனால் ஐசக் தனது பெயரை ஏன் போடவில்லை என தட்டிக் கேட்டார்.
இதனால் இரு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடைசியில் மோதலில் முடிந்தது. இதில் முருகேசன் என்பவரை ஐசக் கோஷ்டியினர் தாக்கினர். பதிலுக்கு முருகேசனுக்கு ஆதரவாக வீரபெருமாள் என்பவர் உள்பட 3 பேர் சேர்ந்து ஐசக்கை தாக்கினர்.
இதைத் தொடர்ந்து இரு கோஷ்டியினரும் அடித்துக் ெகாண்டு ரோட்டில் உருண்டனர்.
இதில் பலத்த காயமடைந்த ஐசக் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதல் குறித்து தாழையத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.