For Quick Alerts
For Daily Alerts
Just In
முன்னாள் யுகோஸ்லோவிய அதிபர் மனைவி, மகன் ரஷ்யாவில் தஞ்சம்
மாஸ்கோ: மறைந்த யுகோஸ்லோவிய முன்னாள் அதிபரும் இனப் படுகொலைகளுக்காக ஐ.நா. சபையாலும் சர்வதேச நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்பட்டவருமான சலாபோதன் மிலோசவெக்கின் மனைவி, மகனுக்கு ரஷ்யா அரசியல் தஞ்சம் அளித்துள்ளது.
இதுவரை மிலோசவெக்கின் மனைவி மிர்ஜனா, மகன மார்கோ ஆகியோர் மீது செர்பியாவில் பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அவர்களுக்கு 2006ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுவிட்டதாக ரஷ்ய குடியுரிமைத்துறை இப்போது தெரிவித்துள்ளது.
யுகோஸ்லோவில் குரேசியா, போஸ்னியா, கொசவோ, செர்பியா உள்ளிட்ட பகுதிகளில் நடந்த உள் நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்ததாக மிலோசவெக் மீது புகார் கூறப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
ஐ.நா. போர் குற்றங்கள் நீதிமன்றத்தில் அவர் மீது விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே அவர் இறந்துவிட்டது குறிப்பிடத்தக்ககது.
மிலோசவெக்கின் சகோதரர் போரிஸ்லேவ் ரஷ்யாவுக்கான யுகோஸ்லோவிய தூதராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Saturday, February 2, 2008, 15:57 [IST]