For Daily Alerts
Just In
மஸ்கட்டில் கட்டடம் இடிந்து 2 இந்தியர்கள் பலி
மஸ்கட்:மஸ்கட்டில் வீட்டு உபயோகப் பொருள் ஷோரூம் இடிந்து விழுந்ததில் 2 இந்திய தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மஸ்கட், அல் குவேயர் மாவட்டத்தில் 34 வருட பழங்கால கட்டடத்தில் வீட்டு உபயோகப் பொருள் விற்பனையகம் இருந்தது.
நேற்று முன்தினம் இந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. உடனே மீட்புக் குழுவினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.
கடும் போராட்டத்திற்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கி இறந்த கேரளாவை சேர்ந்த தொழிலாளர்களான நவ்புல் சம்சுதீன் கரயில் (22), வினோத் குமார்(35) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.
மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மோப்பநாய்களின் உதவியுடன் தேடி வருகிறார்கள்.
Comments
Story first published: Sunday, February 3, 2008, 16:42 [IST]