பெங்களூர்: பெங்களூரில் மார்ச் 3ம் தேதி தொடங்கும் பெங்களூர் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா பங்கேற்கவில்லை. இரண்டரை கோடி ரூபாய் பரிசுத் தொகை கொண்ட பெங்களூர் ஓபன் டென்னிஸ் போட்டி வரும் மார்ச் 3ம் தேதி துவங்குகிறது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போட்டி தொடர் இயக்குநர் சுந்தர் ராஜூ கூறுகையில், கடந்த ஜனவரி 20ம் தேதி பெங்களூர் ஓபன் போட்டிக்கு நடைபெற்ற தகுதிச் சுற்று போட்டியில் சானியா கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் அவர் நடைபெறவிருக்கும் பெங்களூர் ஓபன் போட்டியில் விளையாட மாட்டார். இது அவரது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாகும் என்றார்.