தமிழ்ப் புத்தாண்டு-தமிழக அரசுக்கு விஷ்வ இந்து பரிஷத் கெடு
மதுரை: தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கும் தீர்மானத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் வரும் 20ம் தேதி முதல் ஆர்பாட்டம் நடத்தப்படும் என விஷ்வ இந்து பரிஷத் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரையில் விஷ்வ இந்து பரிஷத்தின் மாநில செயற்குழு கூட்டம் அதன் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் தலைமையில் நடந்தது.
அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய பண்பாடு சின்னமாக அறிவிக்க வேண்டும்.
மலேசியாவில் உள்ள இந்து தமிழர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் லோக்சபாவிலும், தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கும் தீர்மானத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் இந்த தீர்மானத்தை தமிழக அரசு வாபஸ் பெறக் கோரி வரும் 20ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.