ருவாண்டா-காங்கோ நாடுகளில் கடும் நிலநடுக்கம்: 39 பேர் பலி
கிகாலி: ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா மற்றும் காங்கோ நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள காங்கோவில் நேற்று காலை 9.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 34 பேர் உயிரிழந்தனர்.
இதில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். காங்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் நடந்த அடுத்த மூன்றரை மணி நேரம் கழித்து மற்றொரு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் புகாவு என்ற இடத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் ஸ்கேலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.
இரு ஆப்பிரிக்க நாடுகளிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.