For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கச்சத்தீவை மீட்க கோரி பாமக முழக்கப் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கச்சத் தீவை மீட்கக் கோரி பா.ம.க. இளைஞரணி சார்பில் இன்று ஆர்பாட்டம் நடத்தியது.

ராமேஸ்வரத்தில் இன்று காலை 11 மணிக்கு கட்சத் தீவை மீட்கக் கோரி பா.ம.க. இளைஞரணி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தியது.

இதில் பல முக்கிய நிர்வாகிகள் பேசினர். அப்போது அவர்கள் தமிழக மீனவர்கள் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினரால் கடத்தி செல்வதும், மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.

மேலும், மீனவர்களின் மீன் பிடி வலைகளை பறிப்பதும், பிடித்த மீன்களை பறிப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் நமது மீனவர்கள் கச்சத் தீவில் வலைகளை உலர்த்தவும், ஒய்வு எடுக்கவும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவை இலங்கை அரசால் மதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் தான் நமது மீனவர்களின் உரிமைகளை பாது காக்கும் விதமாகவும், கச்ச தீவை மீட்க வேண்டியும் வலியுத்தி தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படுகிறது என்று பேசினர்.

போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பாமக போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X