For Daily Alerts
Just In
கெட்டுப் போன உணவை சாப்பிட்ட 67 மாணவர்கள் மயக்கம்
கரூர்:கரூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியின் விடுதியில் கெட்டுப் போன உணவை சாப்பிட்ட 67 மாணவர்கள் மயக்கம் போட்டு விழுந்தனர்.
கரூர் மாவட்டம், கல்லடை கிராமம் அருகே தனியார் பள்ளியின் விடுதியில் 67 மாணவர்கள் தங்கியிருந்தனர்.
இவர்கள் இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைத்து மாணவர்களும் வரிசையாக மயக்கம் போட்டு விழுந்தனர்.
உடனே அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகளும், மாணவர்களின் பெற்றோர்களும் விரைந்து வந்து அவர்களை சிகிச்சைக்காக தோகமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பை நிலவியது. இது குறித்து போலீசார் கூறுகையில், விடுதியில் இருந்த கெட்டுப் போன உணவை மாணவர்களுக்கு பரிமாறியதால் தான் ஒத்துக்
கொள்ளாமல் அனைவரும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
Comments
Story first published: Wednesday, February 6, 2008, 11:49 [IST]