For Daily Alerts
Just In
உ.பியில் சக மாணவனை துப்பாக்கியால் சுட்ட மாணவன்
சித்ரகூட்: உத்தரப் பிரதேசத்தில் பள்ளி விடுதியில் மாணவன் ஒருவன் உடன் படிக்கும் மாணவனை துப்பாக்கியில் சுட்டதில் படுகாயம் அடைந்தான்.
உத்தரப்பிரதேசம், கர்பி அருகேயுள்ள சித்ரகூட் இன்டர் காலேஜில் விடுதியில் தங்கியிருந்த மன்வேந்திரா என்ற மாணவன் நேற்றிரவு திரைப்படம் பார்க்க சென்றுள்ளார்.
இதை விடுதி வார்டனிடம், 11ம் வகுப்பு படிக்கும் ஆசிஷ் என்ற மாணவன் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மன்வேந்திரா தன்னிடம் இருந்த பிஸ்டலால் ஆசிஷை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த ஆசிஷ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார் மன்வேந்திராவை கைது செய்துள்ளனர்.
துப்பாக்கியால் சுட்ட மாணவனும், காயமடைந்த மாணவனும் ஒரே வகுப்பில் படிப்பவர்களாம். மாணவரிடம் துப்பாக்கி எப்படி வந்தது என பள்ளி நிர்வாகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாம்.
Comments
Story first published: Thursday, February 7, 2008, 17:25 [IST]