காதலியின் அடைய தங்கையை கடத்தியவர் கைது
சென்னை: தனது காதலியை மணம் புரிய, அவரது தங்கையை கடத்தி வைத்து மிரட்டியவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் இவருக்கு ரமா (20), சுமா (18) என இரு மகள்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (28). இவர் எஸ்டிடி பூத் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அந்த பூத்துக்கு அடிக்கடி போன் செய்ய வருவார் ரமா. அப்போது அவருக்கும் சுந்தரமூர்த்திக்கும் காதல் மலர்ந்தது. போன் செய்யும் சாக்கில் அடிக்கடி பூத்துக்கு வந்து காதலை வளர்த்துள்ளார் ரமா.
இது சாமிக்கு தெரிய வந்தது. இதனால் கோபமடைந்த அவர் தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு மகளை அனுப்பி வைத்தார். காதலியுடனான இணைப்பை சாமி துண்டித்ததால் கோபமடைந்தார் சுந்தரமூர்த்தி.
ரமாவை மணக்க நூதன திட்டத்தை தீட்டினார். அவரது தங்கையிடம் பேசி அவரை ஒரு இடத்திற்கு வர வைத்தார். பின்னர் அவரை கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து விட்டார்.
பின்னர் சாமிக்குப் போன் செய்து, ரமாவை எனக்கு கட்டி வைத்து விடுங்கள், அப்போதுதான் சுமா கிடைப்பார் என்று மிரட்டினார்.
இதையடுத்து போலீஸ் உதவியை நாடினார் சாமி. போலீஸார் சுந்தரமூர்த்தி போக்கில் சாமியைப் போக விட்டு அவரை மடக்கிப் பிடித்து கைது செய்து சுமாவை பத்திரமாக மீட்டனர்.