காதலர்களுக்கு தாலிக் கயிறு-இந்து முன்னணி நூதனப் போராட்டம்
இதுகுறித்து இந்து முன்னணியின் திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் ரவி பாலன் கூறுகையில், காதலர் தினம் நமது நாட்டு கலாச்சாரம் அல்ல. மாறாக, நமது நாட்டுக் கலாச்சாரத்தை சீரழிக்க வந்த கொண்டாட்டம் இது.
காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று, காதலர்களிடம் தாலிக் கயிற்ரை அன்பளிப்பாக வழங்கி, கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என வலியுறுத்தவுள்ளோம். இதற்காக 500 மஞ்சள் கயிறுகளை வாங்கி வைத்துள்ளோம்.
காதலர் தின கொண்டாட்ட தடுப்புக் கமிட்டிகளையும் நாங்கள் அமைத்துள்ளோம். பொது இடகளில் காதலர் தினக் கொண்டாட்டம் என்ற பெயரில் அத்துமீறல் சம்பவங்கள் நடந்தால் அவற்றை நாங்கள் தடுப்போம்.
காதலர் தினக் கொண்டாட்டம் என்ற பெயரில், பொது இடங்களில் இளைஞர்களும், இளம் பெண்களும் அத்துமீறி நடந்து கொள்கிறார்கள். எனவே அவர்களை தடுத்து நிறுத்தி போலீஸில் ஒப்படைப்போம் அல்லது அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுப்போம் என்றார்.