ஆண்டுக்கு 600 இந்திய குழந்தைகளை தத்தெடுக்க இத்தாலி திட்டம்
நெல்லை: இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 600 குழந்தைகள் தத்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக இத்தாலி தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இத்தாலி நாட்டின் ஆசோசியன் ஓல்ட்ரே எல் ஓரிசோன்டே என்ற தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் லிண்டா, சாண்டரா ஆகியோர் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது, குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, உலக தரத்தில் வாழும் வாய்ப்பு, நல்ல உறைவிடம், பாதுகாப்பான வாழ்வு ஆகியவை ஏற்படுத்துவது அவசியமாகும். இத்தாலியில் குழந்தைகள் இல்லாத குடும்பத்தினர் ஆதரவற்ற, வசதி வாய்ப்பில்லாத குழந்தைகளை இந்தியாவில் தத்தெடுக்க விரும்புகின்றனர்.
இந்திய நாட்டின் கலாச்சாரம் இத்தாலியர்களுக்கு பிடித்துள்ளது. எனவே குழந்தைகளை இங்கிருந்து தத்தெடுக்கின்றனர். இதற்காக மத்திய அரசின் சமுக நலத்துறையுடன் பேசியுள்ளோம்.
ஆண்டுக்கு 600 குழந்தைகளை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக 5 மில்லியன் யூரோ வரை செலவழிக்க திட்டமிட்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.