மதுரை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தக் கோரி பாமக ஆர்ப்பாட்டம்
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தரத்தை உயர்த்தக் கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த பாமக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று பாமகவினர் மாநகர் மாவட்டத் தலைவர் அசோகன் தலைமையில் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நெசவாளர்கள் போராட்டம்:
இதேபோல இலவச வீட்டுமனை பட்டா கேட்டு இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்தை செல்லூர், தல்லாகுளம், கோரிப்பாளையம், மதிச்சியம், கரும்பாலை ஆகிய பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் முற்றுகையிட்டனர்.
பின்னர் நெசவாளர் சங்க நிர்வாகிகள் கலெக்டர் ஜவகரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
நெசவாளர்களின் முற்றுகை போராட்டத்தால் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.